For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தனியார் டி.வி நிறுவன கருவிகளைப் பயன்படுத்தி விசிடி தயாரித்தவர் கைது

சென்னை:

தனியார் தெலுங்கு டிவியான ஈ.டிவியின் கருவிகளைப் பயன்படுத்தி போலி விசிடி தயாரித்தவர் கைதுசெய்யப்பட்டார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சோதனையில் 676 திருட்டு விசிடிக்கள்பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 67,600 மதிப்புள்ள இந்த தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கிலப் படதிருட்டு விசிடிக்கள் ஒரே கடையில் இருந்தன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிடிபட்ட தமிழ்ப் படங்களில் வெற்றிக் கொடி கட்டு, குஷி, கண்ணன் வருவான், வல்லரசு ஆகியவைஅடங்கும். மொத்தம் 240 தமிழ் விசிடிக்கள் பிடிபட்டன. 290 ஆங்கில விசிடிக்கள், 138 இந்தி மற்றும்3 தெலுங்குப் படங்களின் விசிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டவை. இவை தவிர ஐந்து நீலப் பட விசிடிக்களும்சிக்கின.

வீடியோ கடை உரிமையாளர், தனக்கு வேண்டிய தெலுங்குப் பட விசிடிக்களை ஸ்ரீனிவாசன் என்பவருக்கு பேஜர்கொடுத்துப் பெறுவது வழக்கம் என்று விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும்போலீஸார் கைது செய்தனர்.

ஸ்ரீனிவாசன், தெலுங்கு தனியார் டி.வியான ஈடிவியின் அஞ்சல் மையத்தில் உள்ள கருவிகளைப் பயன்படுத்திதிருட்டு விசிடிக்களை எடுப்பது வழக்கம் என்று போலீஸார் தெரிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X