தமிழகத்தில் இன்று
மீண்டும் வருவேன்...பான்டிங் நம்பிக்கை
டெல்லி
மீண்டும் பழைய வேகத்துடன் விளையாடுவேன் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ரிக்கி பான்டிங் கூறியுள்ளார்.
கால் காயம் காரணமாக சமீப காலமாக விளையாடாமல் இருந்து வருகிறார் ரிக்கி பான்டிங். தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம்மேற்கொண்டிருக்கும் பான்டிங், இளம் வீரர்களுக்குப் பயிற்சி முகாம்கள் நடத்தி வருகிறார்.
டெல்லியில் அவரது மேலாளர் சாம் ஹால்வர்சன் திங்கள்கிழமை பேசுகையில், விரைவில் பயிற்சிக்குத் திரும்புவேன். பழைய வேகத்துடன் சர்வதேசகிரிக்கெட்டுக்குத் திரும்புவேன் என்று பான்டிங் கூறியுள்ளார்.
தற்போது பான்டிங் அதிக நேரம் ஓடுகிறார். இதன் மூலம் கால் தசைகளுக்கு வலுவூட்ட முடியும். எடைப் பயிற்சியிலும் ஈடுபடுகிறார்.
இந்தியப் பயணம் முடிந்தவுடன் மீண்டும் பேட் செய்ய பான்டிங் முடிவு செய்துள்ளார். மீண்டும் கிரிக்கெட் ஆட பான்டிங் மிகவும் ஆர்வமாக உள்ளார் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications