For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
பயிற்சிக் கல்லூரி கேட்கிறார்கள் கிராம கோவில் பூஜாரிகள்
மதுரை:
மதுரையில் கிராம கோவில் பூஜாரிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊர்வலம் நடத்தி, கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
கிராம கோவில் பூஜாரிகள் பேரவையைச் சேர்ந்தவர்கள் மதுரை தல்லாகுளம் பெருமாள் கோவில் முதல் கலெக்டர் அலுவலகம் வரை ஊர்வலம்நடத்தினர்.
50 வயதைக் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேல் கிராமங்களில் உள்ள கோவில்களில் பணிபுரிந்த பூஜாரிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் வழங்குதல்,அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல், 600 க்கும் மேற்பட்ட பூஜாரிகள் பயனடையும் வகையில் அவர்களுக்கு பயிற்சி கல்லூரிகள், அனைத்துகிராமங்களிலும் ஒரு நேர பூஜை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம் நடத்தப்பட்டது.
இறுதியில் அவர்கள் முதல்வர் கருணாநிதியின் முகவரிக்கு எழுதப்பட்ட தங்களது மனுக்களை மாவட்டக் கலெக்டரிடம் சமர்ப்பித்தனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, July 10, 2000, 5:30 [IST]