For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
திருச்சியில் சித்தா டாக்டர்கள் உண்ணாவிரதம்
திருச்சி:
தமிழ்நாடு தனியார் மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட சித்தா மருத்துவர்கள் திங்கள்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதம்மேற்கொண்டனர்.
இவர்கள் சித்த வைத்தியம், ஆயுர்வேதம், யுனானி, அக்குபஞ்சர், ஹோமியோபதி போன்ற பிரிவுகளைச் சேர்ந்தவர்கள். திருச்சி ரயில்நிலையத்தின் முன் இவர்கள்உண்ணாவிரதம் இருந்தனர்.
சித்தா, ஹோமியோபதி, அக்குபஞ்சர் ஆகிய மருத்துவமுறைகளுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இவர்கள்போராட்டம் இருந்தனர்.
யு.என்.ஐ.
Story first published: Monday, July 10, 2000, 5:30 [IST]