தமிழகத்தில் இன்று
சமுதாயம் முன்னேற பெண் கல்வி தேவை: ஸ்டாலின்
திருப்பூர்:
சமுதாய முன்னேற்றத்திற்கு பெண்கள் கல்வி அறிவு பெறுவது அவசியம். தமிழக அரசு பெண் கல்விக்குமுன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகிறது என திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை சென்னை நகர மேயர்மு.க.ஸ்டாலின் கூறினார்.
திருப்பூரில் குமரன் மகளிர் கல்லூரி கட்டிடத் திறப்பு விழா நடந்தது. விழாவில் வீட்டுவசதித் துறை அமைச்சர்பிச்சாண்டி, விளையாட்டுத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதிய கட்டிடத்தை திறந்து வைத்து சென்னை மேயர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:
பெண்கள் கல்வி கற்பதன் மூலம் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும். சமுதாயத்தில் உள்ள மூட நம்பிக்கைகள்ஒழியும்.
மூடநம்பிக்கைகள் ஒழியும்போது பெரியார் கண்ட கனவு நனவாகும். ஒரு பெண் கல்வி கற்பதன் மூலம் வீட்டில்முன்னேற்றம் ஏற்படும்.
திமுக அரசு கல்விக்காக ஒவ்வொரு ஆண்டும் 20 சதவீதம் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து வருகிறது என்று
ஸ்டாலின் பேசினார்.












Click it and Unblock the Notifications