தமிழகத்தில் இன்று
தலித்கள் 60 ... வன்னியர்கள் எத்தனை? கைது கணக்கு கேட்கிறார் திருமாவளவன்
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகள் இயக்கத்தை முதல்வர் கருணாநிதி ஆதரிப்பதாக பா.ம.க. தலைவர் டாக்டர்ராம்தாஸ் கூறியதை இயக்கத் தலைவர் திருமாவளவன் மறுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் கூறியதாவது:
இது வரை 60 தலித் மக்கள் சிதம்பரம் மற்றும் கடலூரில் நடந்த கலவரங்கள் சம்பந்தமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர், ஆனால் வன்னிய இனத்தவர் ஒருவரும் கைது செய்யப்படவில்லை.
டாக்டர் ராமதாசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராக உள்ளேன்.ஆனால் அதற்கு முன் பா.ம.கதலித் மக்கள் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் . அதன் பின்னரே பாதிக்கப்பட்ட பகுதிகளில்அமைதி திரும்பும்.
கடலூருக்கு செலவதற்கு எனக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கடலூரில் உள்ள புளியங்குடியில் மூன்றுதலித்கள் கொல்லப்பட்டனர். அந்தப் பகுதிக்கு போலீஸ் அனுமதி கொடுத்தவுடன்செல்லவிருப்பதாகவும் கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications