தமிழகத்தில் இன்று
"கோவையில் விண்ணப்பித்த 24 மணி நேரத்தில் மின் இணைப்பு
கோவை:
மின் இணைப்பிற்கு விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் மின் இணைப்பு கொடுக்கும்முறை அறிமுகமாகிறது.
இது குறித்து தமிழ்நாடு மின்சார வாரிய கோவை கோட்ட முதன்மைப் பொறியாளர்குமாரவேலு செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் உடனடி மின் இணைப்பு வழங்க கோவை மாவட்டம் தயாராகியுள்ளது.கோவையில் உள்ள வீடுகளுக்கு விண்ணப்பம் பெறப்பட்ட 24 மணி நேரத்தில் மின்இணைப்பு வழங்கப்படும்.
இந்த விண்ணப்பத்தை உதவி இஞ்சினியரிடம் கோடுத்தால் மட்டுமே போதுமானது.முன்பு போல் பல்வேறு துறைகளுக்கு அலைய வேண்டிய அவசியம் இல்லை. இந்தமுறையில் இதுவரை 4 ஆயிரம் வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கியுள்ளோம்என்றார்.
கோவை மாவட்ட கலெக்டர் சந்தானம் கூறுகையில் கோவையில் வாக்காளர்அடையாள அட்டை வழங்கும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது.
இந்தப் பணி தற்போது கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு விரைந்து முடிக்கப்படும்.வரும் ஆகஸ்டு முதல் இப்பணி துவங்கும் என்றார்.












Click it and Unblock the Notifications