தமிழகத்தில் இன்று
சென்னையில் ரூ. 155 கோடியில் ஒரு ஹோட்டல்
சென்னை:
சென்னையில் ரூ. 155 கோடி மதிப்பில் லீ மெரிடியன் ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த ஃபோர்ட்டி ஹோட்டல் குழுமத்தைச் சேர்ந்தது லீ மெரிடியன்ஹோட்டல்கள். லீ மெரிடியன் ஹோட்டல்கள் மற்றும் ரெசார்ட்களின் தலைவர் மற்றும்நிர்வாக இயக்குநர் பெர்னார்ட் லேம்பர்ட் சென்னையில் செய்தியாளர்களிடம்கூறுகையில், மும்பை மற்றும் கொச்சின் ஆகிய நகரங்களில் புதிய ஹோட்டல்கள்திறக்கப்படும்.
சென்னையில் அமைக்கப்பட்டுள்ள ஹோட்டல், ராயல் கிளாஸைச் சேர்ந்தது.இதுபோன்ற ஹோட்டல் இந்தியாவில் அமைவது இதுதான் முதல் முறை. உலகிலேயேஇது ஏழாவது ஹோட்டலாகும் என்றார்.
ஹோட்டலைக் கட்டிய பி.ஜி.பி. குழுமத்தின் தலைவர் டாக்டர் பழனி ஜி பெரியசாமிகூறுகையில், ரூ. 155 கோடி மதிப்பில் இந்த ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.இப்போதைக்கு ஐந்து நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. ஒரு ஆண்டு கழித்துஇது பரிசீலனை செய்யப்படும்.
ஹோட்டலின் தரத்தை கடைப்பிடிப்பதில் மிகுந்த கவனம் செலுத்தப்படும். பல்லவர்காலத்திய கட்டடக் கலையை அடிப்படையாகக் கொண்டு ஹோட்டல்கட்டப்பட்டுள்ளது. ஐரோப்பிய கட்டடக் கலையின் அழகும் இதில் கலந்துள்ளது.
ஹோட்டல் திறப்பு விழா ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் நடக்கும் என்றார் அவர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications