தமிழகத்தில் இன்று
சென்னை டூ திருப்பதி பக்தி சுற்றுலா துவங்கியது
சென்னை:
திருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்குச் செல்லும் பக்தர்களின் நலனை முன்னிட்டு இந்திய சுற்றுலா வளர்ச்சிக்கழகமும், ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக்கழகமும் சென்னையிலிருந்து சுற்றுலா டூரை செவ்வாய்க்கிழமை துவக்கியது.
இந்த சுற்றுலா டூரின்படி சென்னையிலிருந்து சொகுசுப் பேருந்து தினமும் இரவு 9.30 மணிக்குப் புறப்படும்.அதிகாலை 2 மணிக்குச் திருப்பதியைச் சென்றடையும். அங்கே டீலக்ஸ் ஹோட்டலில் பக்தர்கள் தங்கவைக்கப்படுவார்கள். 2 மணிநேரம் ஓய்வெடுக்கலாம். பின்னர் சுவாமி தரிசனத்திற்காக அதிகாலை 5.15 மணிக்குதிருப்பதி திருமலை தேவஸ்தானத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
பூஜை, பிரார்த்தனை முடிந்து அவர்கள் சென்னைக்கு பிற்பகல் 1.30 மணிக்குக் கொண்டு விடப்படுவார்கள்.இதற்கான மொத்த கட்டணம் ரூ 425.
வயதான பக்தர்களின் நலன், நீண்ட வரிசையில் அவர்கள் அவதிப்படுவதைத் தவிர்த்தல், பெருங்கூட்டத்தைச்சமாளித்தல், போக்குவரத்து பிரச்சனை, தங்கும் பிரச்சனை போன்றவைகளைத் தவிர்க்கும் வகையில் இந்த பக்திசுற்றுலா டிரிப்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாக இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் அறிவித்துள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications