தமிழகத்தில் இன்று
ஆனந்த் தொடர்ந்து முன்னிலை
டார்ட்மன்ட் (ஜெர்மனி):
ஜெர்மனியின் டார்ட்மன்ட் நகரில் நடந்து வரும் ஸ்பார்க்கசன் செஸ் போட்டியில் இந்திய கிரான்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் 4 புள்ளிகளுடன் முன்னிலைஉள்ளது.
இத்தொடரில் ஆனந்த் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தின் கிரான்ட்மாஸ்டர் மைக்கேல் ஆடம்ஸ் 3 புள்ளிகளுடன்இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஹங்கேரி கிரான்ட்மாஸ்டர் பீட்டர் லேகோ (3.5) புள்ளிகளுடன் உள்ளார். ரஷியாவின் விலாடிமிர் கிராம்னிக் 3 புள்ளிகளுடன் பின்தங்கிய நிலையில்இருக்கிறார்.
கிராம்னிக்கிடம், தனது இரண்டாவது இரண்டாவது இழந்த பின் உத்வேகத்துடன் விளையாடி வரும் ஆனந்த், இந்தத் தொடரில் பட்டத்தை வெல்லும்வகையில் விளையாடி வருகிறார். தற்போது ஐந்தாவது சுற்றில் அவர் கிராம்னிக்கைச் சந்திக்கிறார்.
இதுவரை நடந்த சுற்றுக்களும், வீரர்களின் புள்ளிகளும் வருமாறு:
ஆனந்த் (4), பீட்டர் லேகோ (3.5), மைக்கேல் ஆடம்ஸ் (3), கிராம்னிக் (3), காலிப்மேன் (2), அகோபியன் (2), பரீவ் (2), பிக்கெட் (1.5),ஹப்னர் (1.5).












Click it and Unblock the Notifications