தமிழகத்தில் இன்று
புத்த பிக்குகள் கொலை: லே நகரில் ஊரடங்கு அமல்
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் பிரிவில், லே நகரில் மூன்று புத்த மத பிக்குகள், கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றம்நிலவுகிறது. இதனால் லே முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பனிகர் என்ற இடத்தில் இந்த புத்த மத பிக்குகள், தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இதுகுறித்து அரசுச் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,கிஷ்ட்த்வார்-லே சாலையில், பனிகர் என்ற கிராமத்தி, புதன்கிழமை இரவு நான்கு புத்த மத பிக்குகள் மீது, தீவிரவாதிகள் கும்பல் தாக்குதல்நடத்தியது. இதில் ஒருவர் காயமின்றித் தப்பினர். மற்ற மூவரும் இறந்தனர்.
புத்த பிக்குகள் கொல்லப்பட்டதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து லே முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார்.பாதுகாப்புப் படைகளும் அங்கு கூடுதலாக குவிக்கப்பட்டுள்ளன.
யு.என்.ஐ.