தமிழகத்தில் இன்று
இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில் சகஜம்!
டெல்லி:
ஜனதாதளம் மீண்டும் ஒருமுறை உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனதாதளம் முதல் முறையாக வி.பி.சிங் காலத்தின்போது உடைந்தது. அதன் பிறகுபிளவுகள், அதன் அரசியல் வாழ்வில் சகஜமானது. இப்போது மீண்டும் ஒருமுறைஉடைய ஜனதாதளம் தயாராகி வருகிறது.
தற்போதைய ஜனதாதளம் ஐக்கிய ஜனதாதளம், மதச்சார்பற்ற ஜனதாதளம் என இருஜனதாதளமாக உள்ளது. இதில் பிளவைச் சந்திக்கப் போவது ஐக்கிய ஜனதாதளம்.
ஜூலை 24-ம் தேதி நாடாளுமன்றத்தின் மழைக் காலக் கூட்டத் தொடர் துவங்குகிறது.அதற்கு முன்பு கட்சியின் எம்.பிக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தச் சமயத்தில்கட்சி உடையும் என்று இக்கட்சியின் எம்.பி.ராம் சந்திர பாஸ்வான் கூறியுள்ளார்.
தற்போது மொத்தம் 10 எம்.பிக்கள் இக்கட்சிக்கு உள்ளனர். இவர்களில் சரிபாதியாகபிரிவின்போது பிரிவார்கள் என்று கூறுகிறார் பாஸ்வான். இவர்கள் தவிர, சமதாக் கட்சிமற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சில எம்.பிக்களும் தங்களுடன் தொடர்புவைத்திருப்பதாக பாஸ்வான் கூறுகிறார்.
இவர்கள் அனைவரும் சேர்ந்து புதிய கட்சியைத் துவக்கவுள்ளதாகவும் பாஸ்வான்தெரிவித்தார். இந்த பாஸ்வான் வேறு யாருமல்ல, மத்திய தகவல் தொடர்புத் துறைஅமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானின் தம்பிதான்.
இந்த வாரத் துவக்கத்திலேயே தான் கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி துவக்கப்போவதாக ராம் சந்திர பாஸ்வான் கூறியிருந்தார். தலித் சேனா அமைப்பின் அகிலஇந்திய துணைத் தலைவராக பாஸ்வான் இருக்கிறார். இதையே இப்போது அரசியல்கட்சியாக பாஸ்வான் மாற்றுவார் என்று தெரிகிறது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications