தமிழகத்தில் இன்று
கட்சி தொடங்குகிறார் முன்னாள் அமைச்சர் கண்ணப்பன்
மதுரை:
பதவி எதுவும் கொடுக்காமல் அதிமுகவில் ஓரங்கட்டி வைக்கப்பட்டிருந்த முன்னாள் அதிமுக அமைச்சர்கண்ணப்பன் அக்கட்சியிலிருந்து விலகி புதுக்கட்சி ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத் துறை அமைச்சராகஇருந்தவர் கண்ணப்பன். அதிமுகவிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் மிகுந்தநம்பிக்கைக்குரிய நபராக இருந்த கண்ணப்பன், இப்போது ஜெயலலிதாவை குற்றம் சாட்டியுள்ளார். அவரதுசெயல்பாடுகள் பிடிக்காமல் போனதால் கட்சியிலிருந்து விலகுவதாக கூறியுள்ளார்.
முன்பு ஒரு முறை கட்சியிலிருந்து விலகிய கண்ணப்பன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ராஜாராம்,அழகுதிருநாவுக்கரசு, முத்துசாமி ஆகியோருடன் சேர்ந்து தனிக்கட்சி தொடங்கினார். ஆனால் அது நெடுநாட்கள்நீடிக்கவில்லை. இதையடுத்து அழகுதிருநாவுக்கரசும், கண்ணப்பனும் மதிமுகவில் இணைந்தனர். அங்கும்அவர்களுக்குப் பதவி எதுவும் கொடுக்காததால் அவர்கள் அதிலிருந்து விலகி மீண்டும் அதிமுக வில் இணைந்தனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் இவர் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட எண்ணினார். ஆனால் தொகுதிகாங்கிரசுக்கு விட்டுக்கொடுக்கப்பட்டது. இதனால் வருத்தமுடன் காணப்பட்டார். இந்த நிலையில் கட்சியிலிருந்துவிலகியுள்ளார்.
முதுகுளத்தூரில் நடந்த விழா ஒன்றில் யாதவர் சங்கம் என்ற புதிய அமைப்பின் கட்டடத்தைத் திறந்து வைத்துப்பேசுகையில், விரைவில் யாதவர்கள், முத்தரையர்கள், நாடார்கள் ஆகியோரை வைத்து தனிக்கட்சி ஒன்றைத்துவக்கப் போவதாக அறிவித்தார். புதிய கட்சியின் முதல் மாநாடு திருச்சியில் நடைபெறும் என்றும் கண்ணன்கூறினார்.












Click it and Unblock the Notifications