தமிழகத்தில் இன்று
காஷ்மீர்: "சுயாட்சி தீர்மானத்தை வாபஸ் பெறும் பேச்சே இல்லை
ஸ்ரீநகர்:
ஜம்மு -காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சி தீர்மானத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை என்று சனிக்கிழமை ஸ்ரீநகரில் நடந்ததேசிய மாநாட்டுக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மாநில சட்டசபை விவகார அமைச்சர் பி.எல்.ஹான்டூ செய்தியாளர்களிடம் கூறுகையில், சட்டசபையில்நிறைவேற்றப்பட்டதீர்மானத்தை வாபஸ் பெற மாட்டோம். இந்தப் பிரச்சினையில் எந்தவித சமரசத்திற்கும் இடமில்லை. சுயாட்சி தவிர வேறுஎதையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்றார் அவர்.
இதற்கிடையே, சுயாட்சி தீர்மானம் தொடர்பாக பிரதமர் வாஜ்பாயுடன் பேச்சு நடத்த முதல்வர் பரூக் அப்துல்லா திங்கள்கிழமை டெல்லி செல்கிறார்.இந்த சந்திப்பின்போது சுயாட்சி தீர்மானம் குறித்து மட்டுமே அப்துல்லா விவாதிப்பார் என்றார் ஹான்டூ.
யு.என்.ஐ.