தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மும்பை நிலச்சரிவு சேதத்தைப் பார்வையிட்டார் சோனியா
மும்பை:
காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி சனிக்கிழமையன்று மும்பை நகரில் நிலச்சரிவு நடந்த மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
கடந்த புதன் கிழமையன்று மும்பையின் அசாத் நகர் -சிராக் நகர் குடிசைப் பகுதியில்பெரும் மழை காரணமாக ஏற்பட்ட நிலச் சரிவில் 69 பேர் கொல்லப்பட்டனர்.
காங்கிரஸ் கட்சித்தலைவர் சோனியா காந்தி நிலச் சரிவு நடந்த இடத்தைசனிக்கிழமையன்று சென்று பார்த்தார்.
சோனியா காந்தியுடன் மாநில முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக் மற்றும் மூத்தகாங்கிரஸ் தவைர்களும் உடன் சென்றனர். பின்னர் நிலச் சரிவில்பாதிக்கப்பட்டவர்களை அன்சுமன் மதார்சாவில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணஉதவிகளை வழங்கினார்.












Click it and Unblock the Notifications