தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

நடிகை காவேரி வழக்கு விசாரணைக்கு உயர்நீதி மன்றம் தடை

சென்னை:

நடிகை காவேரிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தொடர்ந்து விசாரணை நடத்துவதற்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து ஆணைபிறப்பித்துள்ளது.

நடிகை காவேரி வைகாசி பொறந்தாச்சு என்ற தமிழ் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அந்தப் படத்தில் அவர் கதாநாயகியகஅறிமுகமானார். அந்தப் படத்தில் பிரசாந்த் கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படம் வெற்றிப்படமாக காவேரிக்கு அமைந்தாலும் அவருக்குதொடர்ந்து சொல்லும்படியாக பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் சமீபகாலமாக அவர் சின்னத்திரையில் பல தொலைக்காட்சி தொடர்களில் நடிந்து வந்தார். குலவிளக்கு, பஞ்சவர்ணக்கிளி போன்ற தொடர்கழில்நடித்து வருகிறார். தற்போது துளசி என்ற தொடரில் நடித்து வருகிறார். அதன் இயக்குனர் சியாமள கண்ணன்.

இந்தத் தொடரில் நடிகர் வெற்றி கதாநாயகனாக நடித்து வருகிறார். அவர் காவேரி மேல் காதல் கொண்டு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படிகேட்டிருக்கிறார். அதை காவேரி மறுத்தவுடன் கோபம் கொண்டு தரக்குறைவான திட்டியதால் கோபம் கொண்டு காவேரி நடிகர் வெற்றியைதாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இந்தத் தொடரின் இயக்குனர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் புகார் ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். அந்தப் புகாரை தள்ளுபடி செய்யுமாறு நடிகை காவேரிசென்னை உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா காதரி சைதாப்பேட்டையில் காவேரிக்கு மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து ஆணைபிறப்பித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+