தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பெண் கான்ஸ்டபிளைக் கேலி செய்த 3 போலீஸார் சஸ்பெண்ட்
திருச்சி:
பெண் கான்ஸ்டபிளை கேலி செய்து முறைகேடாக நடந்ததாக ஏட்டு உள்பட மூன்றுபோலீஸார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
திருச்சி சிறையில் இந்தச் சம்பவம் நடந்தது. திருச்சி காவல் நிலையத்தைச் சேர்ந்தபெண் கான்ஸ்டபிள் சந்திரா, வழக்கு ஒன்றில் சம்பந்தப்பட்ட பெண் கைதி ஒருவரைநீதிமன்றத்திற்கு அழைத்து வருவதற்காக மத்திய சிறைக்குச் சென்றார். அப்போதுஅங்கு பணியில் இருந்த ஏட்டு மற்றும் ஆயுதப்படையைச் சேர்ந்த இரு காவலர்கள்,சந்திராவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளனர். அவரைக் கேலியும் செய்துள்ளனர்.
இதுகுறித்து நகர காவல்துறை ஆணையரிடம் சந்திரா புகார் கொடுத்தார். விசாரணைநடத்திய ஆணையர் ஜே.கே.திரிபாதி, மூவரையும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications