தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மீண்டும் எனது ஆட்சியைக் கொண்டு வர வேண்டும் என்கிறார் செளத்ரி

சுவா:

பிஜியில் பல இனத்தவரைக் கொண்ட ஆட்சியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று பதவி நீக்கம் செய்யப்பட்ட பிஜி பிரதமர் மகேந்திர செளத்ரிகூறியுள்ளார்.

56 நாட்கள் பிணைக் கைதிகளாக இருந்த செளத்ரி வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டார். அதன் பிறகு முதல் முறையாக செய்தியாளர்களுக்குசனிக்கிழமை அவர் பேட்டியளித்தார். பேட்டியில் செளத்ரி கூறியதாவது:

எனது தலைமையில் இருந்த பல இனத்தவர் கொண்டஆட்சியை மீண்டும் பிஜியில் கொண்டு வர வேண்டும். பிஜியில் நடந்துள்ள ஜனநாயகப் படுகொலை முடிவுக்குவர வேண்டும்.

ஜனநாயகரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மீண்டும் கொண்டு வருவதில பிஜி மக்கள் உறுதியாக இருக்க வேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்ற வகையில் இந்த வேண்டுகோளை பிஜி மக்கள் முன் வைக்கிறேன். நமது நாட்டின் அரசியல் சட்டத்தைப்பாதுகாக்க வேண்டுமானால் மீண்டும் பிஜியில் ஜனநாயகம் தழைக்க வேண்டும்.

மீண்டும் ஆட்சியமைப்பது குறித்து எனது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த அமைச்சர்களுடன் அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவிருக்கிறேன்என்றார் செளத்ரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+