தமிழகத்தில் இன்று
பெண்கள் ஜீன்ஸ் அணிந்து குருத்வாராவுக்கு வரலாம்
அமிர்தசரஸ்:
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸிலுள்ள சீக்கிய கோவிலான குருத்வாராவுக்குள், பெண்கள் ஜீன்ஸ் அணிந்து கொண்டு வரலாம் என்று
ஷிரோமனி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி(எஸ்ஜிபிசி) தலைவர் பீபி ஜாகீர் கெளர் கூறியுள்ளார்.
ஜீன்ஸ் அல்லது ஸ்கர்ட் அணிந்து வரும் பெண்களை குருத்வாருக்கு வருவதிலிருந்து தடை செய்ய முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
சனிக்கிழமை அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில், ஜீன்ஸ் அணிந்து கொண்டு குருத்வாராவுக்கு வரக் கூடாது என்று டெல்லியிலுள்ள குருத்வாராகூறியுள்ளது. ஜீன்ஸ் அணிந்து வருபவர்களை குருத்வாராவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற முடிவை ஏற்க இயலாது.
சீக்கிய மதம் மத வெறி பிடித்ததல்ல. அனைவரையும் அரவணைத்துச் செல்வதே சீக்கிய மதம்.
குருத்வாராவுக்கு வரும் பக்தர்களுக்கு கோயிலின் புனிதத்தன்மையைப் பற்றியும் பிரார்த்தனைக்கு வரும் போது கடை பிடிக்கப்பட வேண்டிய ஒழுக்கங்கள்பற்றியும் தெரிவிக்க வேண்டும்.அவர்கள் பிரார்த்தனை தலங்களுக்கு வரும் போது இந்திய பண்பாட்டை நிலை நிறுத்தும் இந்திய உடைகளை அணிந்து வரவேண்டும்.
இது போன்றவற்றை அறிவுறுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். எனவே பெற்றோர் இவ் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதுஅவர்களது கடமை என்றும் பீபிஜாகிர் கவுர் கூறினார்












Click it and Unblock the Notifications