தமிழகத்தில் இன்று
இயேசு கிறிஸ்து கம்யூனிஸ்டா?
ஹவானா:
இயேசு கிறிஸ்து கம்யூனிசக் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டிருந்தார் என்று கூறுகிறார் கியூபா அதிபர் பிடல் காஸ்ட்ரோ.
இதற்கு உதாரணமாக, தனது முதல் சிஷ்யர்களாக, மீனவர்களை அவர் தேர்ந்தெடுத்தததை காஸ்ட்ரோ குறிப்பிட்டுள்ளார்.
கலிலி தீவுப் பகுதியிலிருந்து சில மீனவர்களையே தனது முதல் சீடர்களாக இயேசு ஏற்றுக் கொண்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. கியூபாநாடாளுமன்றத்தில், காஸ்ட்ரோ பேசுகையில், இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய காஸ்ட்ரோவின் தம்பியும், அவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவருமான ராகுல் காஸ்ட்ரோ, மீனவர்களுக்கு சம மரியாதைகொடுத்தவர் இயேசு. அவர் ஒரு கம்யூனஸ்ட் என்ற காரணத்தால்தான் அவரைக் கொன்று விட்டார்கள். அன்று இயேசு செய்ததைத்தான் இன்று பிடல்செய்து கொண்டுள்ளார். அதற்குப் பெயர்தான் புரட்சி.
73 வயதாகும் பிடல் காஸ்ட்ரோ கிறிஸ்தவ பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1959-ம் ஆண்டு கியூபாவில் நடந்த புரட்சிக்குப்பிறகு தனது நிலையை மாற்றிக் கொண்டார். ஆனால் சமீப காலமாக மீண்டும் கிறிஸ்தவ மதத்தின் மீது அவருக்குப் பற்று அதிகரித்து வருகிறது.1998-ல் போப் ஆண்டவர் கியூபாவுக்கு வந்தபோது காஸ்ட்ரோவின் அணுகுமுறை முற்றிலும் மாறியது. கிறிஸ்தவ மதம் மீதான அவரது தனிப்பட்டகருத்தைக் குறைத்துக் கொண்டார். அதற்குப் பதிலாக அனைத்து மதத்தையும் மதிக்க வேண்டும் என்றரீதியில் பேசத் துவங்கினார்.
காஸ்ட்ரோ தனது நாடாளுமன்றப் பேச்சில், அர்ஜென்டினாவின் புரட்சித் தலைவர் சே குவேரா, மாபெரும் புனிதராக மாறியிருப்பார். ஆனால் அவர்கத்தோலிக்கக் கிறிஸ்தவராக இல்லாததால், அது சாத்தியமாகவில்லை. அத்தனை புனித குணங்கள் அவரிடம் இருந்தன என்றார்.












Click it and Unblock the Notifications