தமிழகத்தில் இன்று
காங். தலைவர்கள் புறக்கணித்த காமராஜர் பிறந்த நாள் விழா
சென்னை:
காமராஜரின் 98-து பிறந்த நளை முன்னிட்டு சென்னையில் சனிக் கிழமை காங்கிரஸ்சார்பில் நடந்த பிறந்த நாள் விழாவில் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர்.
தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் அன்பழகன், முல்லைவேந்தன், சென்னை மேயர்ஸ்டாலின் ஆகியோர் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
த.மா.க. சார்பில் தி நகரில் உள்ள காமராஜர் இல்லத்தில் அவரது பிறந்த நாள் விழாநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.காமராஜரின் 98வது பிறந்த நாளை கொண்டாடும்வகையில் 98 பேருக்கு இலவச வேட்டி, சேலைகளை மூப்பனார் வழங்கினார். மாணவமாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
தமிழக காங்கிரஸ் சார்பில் அதன் தலைவர் இளங்கோவன், அகில இந்திய காங்கிரஸ்நிர்வாகிகள் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர் சென்னை அண்ணாசாலையில்உள்ள காமராஜர் சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக காங்கிஸ் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏழை மாணவமாணவிகளுக்கு இலவச உதவிகள் வழங்கப்பட்டன. திருவான்மியூரில் காமராஜர்சிலை திறப்பு விழாவும், காமராஜர் பிறந்த நாள் விழாப் பொதுக் கூட்டமும்நடைபெற்றது. இந்த கூட்டத்தில் நட்வர்சிங், அனில் சாஸ்திரி ஆகியோர் பேசினர்.
தமிழக காங்கிரஸ் சார்பில் மேலிடத் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சிகள்அனைத்தையும் முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, திண்டிவனம்ராமமூர்த்தி, குமரிஅனந்தன் ஆகியோரின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர்.












Click it and Unblock the Notifications