தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

முஷாரப்பைச் சந்தித்தார் இலங்கை ராணுவத் தளபதி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்பை, இலங்கை ராணுவத் தளபதி ஸ்ரீலால் வீரசூர்யா வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.

இரு நாடுகளுக்கிடையே, நெருக்கமான ராணுவ உறவை ஏற்படுத்திக் கொள்வது தொடர்பாக இருவரும் விவாதித்தனர் என்று தெரிகிறது. சுமார் 30நிமிஷங்களுக்கு நீடித்த இந்த சந்திப்பு குறித்து எந்தத் தகவலும் வெளியிடப்படவில்லை.

யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் கடுமையாக போரிட்டு வரும் வேளையில், கடந்த மே மாதம் யாழ்ப்பாணத்தில் சிக்கியிருந்த 30,000 ராணுவவீரர்களின் உயிக்கு புலிகளால் ஆபத்து ஏற்பட்டது. அப்போது அவர்களைக் காப்பாற்றக் கோரி பல நாடுகளுக்கும் ஓடியது இலங்கை அரசு. அந்தச்சமயத்தில், இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் அனுதாபம் தெரிவித்தது.

இலங்கைக்கு பாகிஸ்தான் ஆயுத சப்ளை செய்யலாம் என்ற பேச்சு எழுந்தது. இந்தச் சூழ்நிலையில், மே மாதம் கொழும்புவில் செய்தியாளர்களிடம் பேசியஇலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர், சீனா, இங்கிலாந்து, பாகிஸ்தான், உக்ரைன், இஸ்ரேல் ஆகிய நாடுகளிடமிருந்து இலங்கைஆயுதம் வாங்குவதாகவும், என்ன வகையான ஆயுதங்கள் அவை என்பதை சொல்ல முடியாது என்றும் கூறியிருந்தார்.

தற்போது இலங்கை ராணுவத் தளபதி பாகிஸ்தான் ராணவ ஆட்சியாளரைச் சந்தித்துள்ளதன் மூலம், பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுத சப்ளை செய்கிறதோ என்றசந்தேகம் வலுப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+