தமிழகத்தில் இன்று
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண விரைவில் முத்தரப்புப் பேச்சு
கொழும்பு:
இலங்க்ை தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் பொருட்டு, ஆளுங்கட்சி, முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் இலங்கைத் தமிழர்கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை விரைவில் நடத்தப்படும் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.
இதுவரை அரசியல் சட்டத் திருத்தம், தமிழர் பிரச்சினைக்கான தீர்வு காண்பது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவைமட்டுமே பேசி வந்தன. தற்போதுதான் முதல் முறையாக தமிழ் கட்சிகளும் பேச்சுவார்த்தையில் சேர்க்கப்பட்டுள்ளன.
தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் தருவது தொடர்பாக, ஆளுங்கட்சிக்கும், ஐக்கிய தேசிய கட்சிக்கும் இடையே ஏற்பட்டுள்ள ஒப்பந்தத்தை ஏற்கமுடியாது என்று ஏற்கனவே தமிழர் கட்சிகள் கூறி விட்டன. வட கிழக்கு மாகாணம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கணிப்பு நடத்தக் கூடாது என்றுதமிழர் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
அதிபர் சந்திரிகாவுடன் இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட தமிழர் ஐக்கிய முன்னணிக் கட்சி, அரசியல் தீர்வு தொடர்பாக எந்தவிதசமரசத்தையும் ஏற்றுக் கொள்ள மாட்டோம். ரொம்பவே இறங்கி வந்து விட்டோம். இதற்கு மேலும் இறங்கி வர முடியாது. தமிழர்களின்உணர்வுகளைப் புறக்கணிக்கும் வகையில் இப்போதைய அரசியல் தீர்வுத் திட்டம் உள்ளதாக அக்கட்சி கூறியுள்ளது.
மேலும், விடுதலைப் புலிகளின் ஒத்துழைப்பின்றி எந்த அரசியல் தீர்வையும் காண முடியாது. இப்பிரச்சினையில் விடுதலைப் புலிகளும் ஒரு முக்கிய கட்சி.அவர்களைப் புறக்கணிப்பது இயலாத காரியம் என்று அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார்.
இதே கருத்தையே ஈ.பி.டி.பி., பிளாட் ஆகிய தமிழ் கட்சிகளும் வெளிப்படுத்தியுள்ளன.
இதற்கிடையே தமிழ் கட்சிகள் அரசியல் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும்கூட, அதிபர் சந்திரிகா அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று தெரிகிறது. முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு இருப்பதால், அரசியல் சட்டத் திருத்தத்தை எளிதாகநாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் என்று அவர் நினைப்பதாகத் தெரிகிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications