For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

"தீவிரவாதிகளை ஒடுக்க கடுமையான சட்டம் தேவை

சென்னை:

தீவிரவாதிகளை ஒடுக்க தற்போதுள்ள சட்டங்கள் போதாது. கடுமையான தண்டனைதரக் கூடிய புதிய சட்டங்கள் தேவை என்று பாரதிய ஜனதா கட்சியின்பொதுச்செயலாளர் வெங்கையா நாயுடு சென்னையில் தெரிவித்தார்.

சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நாட்டை சீர்குலைக்கும் எண்ணத்துடன் வெளிநாட்டு சக்திகளால் தீவிரவாதிகள்இயக்கப்படுகின்றனர். அவர்களை தண்டிப்பதற்குத் தற்போது நாட்டில் உள்ளசட்டங்கள் போதாது. எனவே கடுமையான சட்டங்கள் தேவைப்படுகிறது.

தற்போதுள்ள சட்டங்களே தீவிரவாதிகளை தண்டிக்க போதுமானது என்று மனிதஉரிமை கமிஷன் கருத்து கூறியுள்ளது. அக்கருத்தை பா.ஜ.க. ஏற்காது. தீவிரவாதிகளைஒடுக்க "தடா சட்டம் போன்ற புதிய சட்டம் உருவாக்கப்பட வேண்டும்.

மனித உரிமையை விட தேச நலன் முக்கியமானது. வெளிநாடுகளிலும் தளம்அமைத்து இயங்கி வரும் தீவிரவாதிகளையும், அவர்களது அமைப்புகளையும்கடுமையான சட்டங்களைக் கொண்டு ஒடுக்குவதில் மத்திய அரசு பொதுக் கருத்துஒன்றை உருவாக்க வேண்டும்.

தீவிரவாத நடவடிக்கைகளை ஒடுக்குவதற்கு புதிய சட்டம் தேவையா? என்று மத்தியசட்டக் கமிஷனிடம் மத்திய அரசு கருத்து கேட்டது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுபடி சில அவசியமான சூழ்நிலைகளில் கடுமையான புதியசட்டம் தேவை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு கடுமையான புதிய சட்டம் தேவை. அதேசமயம் அதைதவறாக பயன்படுத்தாமல் இருப்பதற்கும் பாதுகாப்பு அம்சங்கள் தேவை என்று மனிதஉரிமை கமிஷன் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ளது.

நாட்டில் 10 வழக்குகளில் கூட தீவிரவாதிகள் தண்டிக்கப்படவில்லை என்பது தான்தற்போதைய நிலை. இதை மாற்ற கடுமையான சட்டங்களால் மட்டுமே முடியும் என்றுபா.ஜ.க .நம்புகிறது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கை.அதனால் கூட்டணிக்கும், ஆட்சிக்கும் ஆபத்து என்பது சுத்த பிதற்றல். தமிழகத்தில்இப்பிரச்னையை முதல்வர் கருணாநிதி சுமுகமாக தீர்த்து வைப்பார் என்றார் நாயுடுநம்பிக்கையுடன்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X