தமிழகத்தில் இன்று
ரஷிய முஸ்லிம்கள் 4 முறை திருமணம் செய்ய வருகிறது தடை
மாஸ்கோ:
ரஷ்யாவில் உள்ள முஸ்லீம்கள் அவர்களது மத முறைப்படி நான்கு முறை திருமணம் செய்வதற்குத் தடை விதிக்க ரஷிய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
ரஷியாவின் இங்குஷெட்டியா மாகாணத்தில் அதிக முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இதற்குப் பக்கத்து மாகாணமான செச்னியாவில் முஸ்லீம்கள்தான்பெரும்பாலும் இருக்கின்றனர். முஸ்லிம் சட்டப்பட்டி ஒரு ஆண் 4 பெண்களை மணம் புரிந்து கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது, இங்குஷெட்டியா உயர் நீதிமன்றம் முஸ்லிம்களின் பழமையான பழக்கங்களை முடிவுக்குக் கொண்டுள்ளது. ரஷ்ய சட்டப்படி ஒருவர்ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணம் செய்து கொள்வது குற்றமாகும்.
இங்குஷெட்டியாவில் முஸ்லீம்கள் நான்கு முறை திருமணம் செய்து கொள்ளுமம முறைக்குத் தடை விதிக்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், பொறுப்புக்கு வந்த நாள்முதல் முயன்று வருகிறார். ரஷ்ய சட்டத்திற்கு புறம்பான பல தார முறையை முடிவுக்கு கொண்டுவர தீவிர முயற்சிகள் எடுத்து வருகிறார்.
சோவியத் யூனியன் பிரிவைச் சந்தித்த பிறகு கடந்த ஆண்டு மட்டும் 15 பேர், இரண்டு அல்லது மூன்று முறை திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
அரசு இப்படி நடவடிக்கை எடுத்து வரும் வேளையில், அதிரடி அரசியல் தலைவர்களில் ஒருவரான விளாடிமிர் ஷ்ரினோவஸ்கி, பல தார முறையை தடை செய்யக்கூடாது எனக் கூறியுள்ளார்.