தமிழகத்தில் இன்று
சாட்சிகள் பட்டியலை மாற்றினால் ... சசிகலா வக்கீல் ஆவேசம்
சென்னை:
டான்சி ஊழல் வழக்கு விசாரணையின் போது சாட்சிகள் பட்டியலில் மாற்றம்செய்தால், உயர்நீதிமன்றத்திலோ அல்லது உச்சநீதிமன்றத்திலோ முறையிடுவேன் எனசசிகலாவின் வழக்கறிஞர் சிறப்பு நீதிமன்றத்தில் எச்சரிக்கை விடுத்தார்.
டான்சி வழக்கில் விசாரணை முடிவடைந்த பின், மூன்றாவது தனி நீதிமன்ற நீதிபதிஅன்பழகன், திங்கள்கிழமையன்று எதிர்தரப்பு சாட்சிகள் தாக்கல் செய்யப்படவேண்டும். அந்த பட்டியல் முக்கியமான சாட்சியங்களை கொண்டதாக இருக்கவேண்டும். அதுவும் குறைவான எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்றுசசிகலாவின் வழக்கிறஞர் ஜோதியிடம் கூறினார்.
அதற்கு சசிகலாவின் வழக்கறிஞர் ஜோதி தேவையான,முக்கியமான சாட்சிகள்மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளன. அதில் மாற்றம் செய்யக் கூடாது. சாட்சிகள் பட்டியலில்தலையிட்டால் மேல் நீதிமன்றத்தில் முறையிடுவேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் தலைைமைச் செயலாளர் டி.வி.வெங்கட்ராமனிடம்நடைபெற்ற குறுக்கு விசாரணையில் அவர் டான்சி நில விற்பனை குறித்துஜெயலலிதாவுக்கு நான் அறிவுரை மட்டுமே கூறினேன். எழுத்துப்பூர்வமாகஎந்தவிதமான அறிவுரையும் கூறவில்லை என்றார்.