தமிழகத்தில் இன்று
படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக் காயம்
சென்னை:
சென்னையில் நடந்த படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக் காயம் அடைந்தார். அவருக்குஆபரேஷன் செய்யப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார்.
கார்த்திக், தற்போது பி.வாசு இயக்கிவரும் பெயரிடப்படாத படம் ஒன்றில் நடித்துவருகிறார். அந்த படத்தை செவன்த் சேனல் நிறுவனம் தயாரித்து வருகிறது.
படப்பிடிப்பு ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஒரு வீட்டில் நடந்தது. கார்த்திக்முரடர்களுடன் மோதும் காட்சி படமானது. ஸ்டண்ட் மாஸ்டர் தளபதி தினேஷுடன்மோதி பழைய சாமான்கள் இருக்கும் இடத்தில் அவர் விழுவதாக காட்சிஅமைக்கப்பட்டது.
காட்சி படமாக்கப்பட்டபோது கார்த்திக் விழுந்த இடத்தில் உள்ள கம்பி கார்த்திக்கின்விலா எலும்பில் குத்தியது. ஆனால் வலியைப் பொருட்படுத்தாது, தொடர்ந்துகார்த்திக்கில் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இருப்பினும் வலி அதிகமானதால் அவரை தளபதி திணேஷ், கார்த்திக்கை அடையாறில்உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவிஅளிக்கப்பட்டு, காயத்திற்கு ஐந்து தையல் போடப்பட்டது.
மறுநாாள் காயம் பட்ட இடத்தில் வலி அதிகமாகி வீக்கமும் காணப்பட்டதால்ஜி.ஜி.ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு எகஸ்-ரே எடுத்துப் பார்க்கபட்டது.அதில் கார்த்திக்கின் விலா எலும்பை இணைக்கும் சதைப் பகுதி சிதைந்திருந்தது.
இதையடுத்து கார்த்திக்கிற்கு சனிக்கிழமை மாலை ஆபரேஷன் செய்யப்பட்டது.