தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

குஷ்வந்த் சிங்கிற்கு நேர்மையான மனிதர் விருது

டெல்லி:

1998 ம் ஆண்டிற்கான நேர்மையான மனிதர் விருது எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கிற்குக் கிடைத்துள்ளது.

சுலப் சர்வதேச சமூக சேவை அமைப்பு இந்த விருதை வழங்கியது. ரூ. பத்து லட்சம், தங்க மெடலும் கொண்டது இந்த விருது. "ஸ்மால் லைஸ்அன்ட் ஸ்மால் தெஃப்ட்ஸ் ஆஃப் பால்பாயின்ட் பென் என்ற கதைக்காக குஷ்வந்த் சிங்கிற்கு இவ்விருது வழங்கப்படுகிறது

டெல்லியில் சனிக்கிழமை மாலை நடந்த விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, குஷ்வந்த் சிங்கிற்கு விருதை வழங்கினார்.

நாயுடு பேசுகையில், நேர்மையான மனிதர் என்ற விருதை குஷ்வந்த் சிங்கிற்கு வழங்குவதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். மிகவும்நகைச்சுவையாகவும், காதல் நயமிக்க கதைகள் எழுதுவதிலும் வல்லவர் என்றார்.

நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங் கூறுகையில், நான் குஷ்வந்த் சிங்கின் வாசகர்.பொதுவாக அவரது அனைத்து கதைகளையும் நான் படித்து விடுவேன். செக்ஸ் கதைகளை நகைச்சுவை கலந்து எழுதுவதில் அவருக்கு நகர்அவர்தான். எழுதுவதைத் தவிர்த்து, அவர் மிகச் சிறந்த ஒழுங்கு முறைகளைக் கடைபிடிக்கும், நேர்மையான மனிதர். இந்தவிருதுக்கு அவர்தகுதியானவர்தான் என்றார்.

நிகழ்ச்சியில், ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் மன்மோகன்சிங், எம்.பி.சாங்வி, பிரதமரின் பத்திரிக்கை ஆலோசகர் எச்.கே.துவா,காங்கிரஸ் தலைவர் ஜாக் பெர்வீஷ் சந்திரா, மற்றும் சுலப் சர்வதேச சமூக சேவை மைய நிறுவனர் பின்டேஷ்வர் பதக் ஆகியோர்கலந்து கொண்டனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+