தமிழகத்தில் இன்று
"தேயிலை ஏற்றுமதியாளர், உற்பத்தியாளர் இடைவெளி நீங்க வேண்டும்
கோவை:
தேயிலையின் தரத்தை மேம்படுத்த ஏற்றுமதியாளர்களுக்கும், உற்பத்தியாளர்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக்குறைக்க வேண்டும் என கோவையில் தேயிலை வாரிய சேர்மன் எஸ்.எஸ் அகுஜா தெரிவித்தார்.
கோவையில் தென்னிந்திய தேயிலை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தைத் தொடங்கி வைத்து அகுஜா பேசியதாவது:
தேயிலையில் பல்வேறு வகை இருந்தாலும், ஒரு சில வகைத் தேயிலை மட்டுமே சர்வதேச அளவில் ஏற்றுக் கொள்ளக் கூடிய தரம்வாய்ந்த தேயிலையாக இருந்து வருகிறது. நீலகிரியில் கடந்த 50 ஆண்டுகளாக விவசாயிகள் பல்வேறு ரக தேயிலைகளைப்பயிரிட்டு வருகின்றனர்.
இந்த விவசாயிகள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் செயல்பட்டு வருகின்றனர். ஆனால்,தேயிலையின் தரத்தை உயர்த்த எவ்வித முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. வழக்கமாகப் பயிரிடப்படும் சி.டி.சி. ரகதேயிலையை விட, ஆர்த்தோடக்ஸ் வகைத் தேயிலை தரம் வாய்ந்ததாக இருக்கும்.இந்த தேயிலைக்கு எப்போதும் கிராக்கி உண்டு. எனவே, ஏற்றுமதியாளர்களும் இந்த ரகத் தேயிலையைப் பயிரிடுமாறுவிவசாயிகளுக்கு எடுத்துக் கூற வேண்டும். இதனால் தரமான தேயிலையை உற்பத்தி செய்வதோடு ஏற்றுமதியைப் பெருக்கமுடியும்.
தேயிலை விவசாயிகளுக்கு மானியமாக இதுவரை 50 லட்ச ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கிலோ ஒன்றிற்கு 5 ரூபாய்வழங்கப்பட்டுள்ளது என்றார் அகுஜா.












Click it and Unblock the Notifications