தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தி.மு.க கூட்டணியில் தொடர்வோம் என்கிறார் திருநாவுக்கரசு
கோவை:
தமிழ்நாட்டில் வரும் சட்டசபைத் தேர்தலில் திமுக-பாஜக கட்சிகளுடனான தங்களது கூட்டணி தொடரும் என்று எம்.ஜி.ஆர்.அ.தி.மு.க கட்சிப்பொதுச்செயலாளர் எஸ்.திருநாவுக்கரசு தெரிவித்தார்.
கோவையில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் வரும் தேர்தலில் அதிக இடங்கள் ஒதுக்கும்படி கேட்டுக் கொள்வோம்.
இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண காங்கிரஸ் கட்சி கூறுவது போல் பிரதமர் வாஜ்பாய் ராணுவ உதவி எதுவும் செய்யக்கூடாது.
ஜம்மு-காஷ்மீருக்கு சுயாட்சி வழங்குவதை நாங்கள் ஆதரிக்க மாட்டோம். மாறாக அந்த மாநிலத்திற்கு அதிக அதிகாரம் வழங்குவதை ஆதரிப்போம்என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications