தமிழகத்தில் இன்று
வேலைக்காரப் பெண்ணை விபசாரத்துக்கு விற்க முயன்ற 3 பேர் கைது
திருவனந்தபுரம்:
வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்ற பெண்ணை விபசாரத்துக்கு விற்க முயன்ற ஒரு பெண்ணும் அவரது உதவியாளர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த பீனா ஜான்சன் கொடுத்த புகாரின் பேரில் இவர்கள் கைது செய்யப்பட்டனர். பீனா ஜான்சன் புகார் விவரம்:
ஐக்கிய அரபுக் குடியரசின் தலைநகர் அபு தாபியில் வீட்டு வேலை வாங்கித் தருவதாக கொச்சி அருகேயுள்ள பல்லுருத்தி என்ற ஊரைச் சேர்ந்த ரஹீமாகூறினார். அதற்காக நான் ரூ.30 ஆயிரம் கொடுத்தேன்.
எனக்கு விசா எடுத்துக் கொடுத்து என்னை அபுதாபிக்கு அழைத்துச் சென்ற ரஹீமா, தனது நண்பர் பல்கீஸ் மற்றும் பல்கீஸின் உதவியாளர் அசோக்ஆகியோருடன் சேர்ந்து என்னை விபசாரத்துக்கு விற்க முயன்றனர்.
மேலும், அபு தாபியில் ஜாவாசத் சாலையில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தினர். அசோக் என்னை அடித்துத் துன்புறுத்தினார்.
சில நாட்களுக்குப் பிறகு நான் அவர்களிடமிருந்து தப்பித்து அபு தாபியில் உள்ள இந்திய தூதரகத்துக்குச் சென்று புகார் கொடுத்தேன். அவர்கள் என்னைஇந்தியாவுக்கு அனுப்பி வைத்தனர்.
எனது சொந்த ஊருக்கு வந்த பிறகு போலீஸாரிடம் புகார் கொடுத்தேன் என்றார் பீனா.
பீனா கொடுத்த புகாரின் பேரில், கேரள போலீஸார் உடனே நடவடிக்கை எடுத்து ரஹீமா மற்றும் அவரது ஆண் உதவியாளர்கள் ஹம்சா, அஷ்ரப்ஆகியோரைக் கைது செய்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications