தமிழகத்தில் இன்று
செருப்பைக் காட்டியதால் அவமானப்படுத்தினோம்: "ஈவ் டீசிங் வாலிபர்கள்
சேலம்:
"செருப்பைக் காட்டித் திட்டியதால், நிர்வாணப்படுத்துவோம் என மிரட்டினோம் என சேலத்தில் மாணவி அகிலா ஈவ்டீசிங் வழக்கில் கைதான 3 பேரும்போலீசாரிடம் அளித்த வாக்கு மூலத்தில் கூறியுள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி அரசு மேல்நிலைபள்ளியில் படித்து வந்த மாணவி அகிலாவை 3 பேர் ஈவ் டீசிங் செய்தனர். இதனால்அவமானமடைந்த அகிலா, தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஆட்டோ டிரைவர் யூசுப் (20), நூர் முகமது (19), ஜாபர் (20), ஆகியோர் போலீசாரிடம் அளித்துள்ளவாக்குமூலத்தில் கூறியுள்ளதாவது:
நாங்கள் 3 பேரும் நண்பர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்வோம். ஆட்டோவில் ஒன்றாகச் செல்வோம். கடந்த 7-ம் தேதி தம்மம்பட்டிக்குநூர் முகமது, யூசுப் ஆகியோர் மொபட்டில் சென்று, அங்கிருந்த பள்ளி மாணவிகளைக் கிண்டல் செய்தோம். அப்போது அகிலாவையும் கிண்டல் செய்தோம்.அகிலா செருப்பைக் காட்டித் திட்டினார்.
இது பற்றி யூசுப்பிடம் சொன்னோம். யூசுப், செருப்பைக் காட்டி திட்டியதால் அவளை மிரட்ட வேண்டும் எனக் கூறினான். எனவே நாங்கள் 3 பேரும்ஆட்டோவில் பள்ளிக்குச் சென்றோம். பள்ளி விட்டு பஸ் ஸ்டாண்ட் வந்து கொண்டிருந்த அகிலாவை பின் தொடர்ந்து கேலி செய்தோம். அவள் பஸ்சில் ஏறிஅமர்ந்து கொண்டாள்.
நாங்களும் பஸ்சில் ஏறி, செருப்பைக் காட்டி மிரட்டுகிறயா? உன்னை நிர்வாணப்படுத்தினால் தான் எங்கள் ஆத்திரம் தீரும் என கூறிவிட்டுச் சென்றோம் என்றுவாக்குமூலத்தில் கூறியுள்ளனர்.
அகிலாவின் தந்தை ராஜேந்திரன் கூறும்போது, எனது மகளுக்கு ஏற்பட்ட நிலை எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது. இந்த சம்பவத்தில்ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண்கள் பள்ளியில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட வேண்டும் என்றார்.
இதற்கிடையே, சேலம் ரூரல் எஸ்.பி. ராஜேந்திரன் விடுத்துள்ள எச்சரிக்கையில், இனி இது போன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, போலீஸ் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
யாராவது ஈவ் டீசிங்கில் ஈடுபட்டால் உடனடியாக அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனிலோ, அல்லது மாவட்ட எஸ்.பி. அலுவகத்தையோ தொடர்பு கொண்டு புகார்தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளார்.