தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

டெலிபோனில் வந்த ரூ. 50 லட்சம் ஹெராயின்

சென்னை:

மர்ம பார்சலில் வந்த டெலிபோன் கருவியை சோதனையிட்ட போது ரூ. 50 லட்சம் மதிப்புள்ள ஹெராயின்போதைப்பொருள் சிக்கியது.

சென்னை, மந்தைவெளி ஆர்.கே மடம் சாலையில் எலக்ட்ரானிக் கடை நடத்தி வருபவர் கே.ஏ.பாலாஜி.இவருக்குக் கடந்த 14-ம் தேதி ஒரு பார்சல் வந்தது.

தனியார் கூரியர் நிறுவனத்தை சேர்நத ஒருவர் அந்த பார்சலை கொண்டு வந்தார். அப்போது பாலாஜிகடையை திறக்கவில்லை. அதனால் பாலாஜியின் கடைக்குப் பக்கத்தில் உள்ள கடைக்காரரிடம்ஒப்படைத்துவிட்டு சென்று விட்டார் கூரியர் பணியாளர்.

பின்னர் கடையைத் திறக்க வந்த பாலாஜி பார்சலைப் பிரித்து பார்த்த போது புது விதமான டெலிபோன்இருந்தது. அதில் ஆர்பிட் என்று எழுதியிருந்ததது. அந்த டெலிபோன் மீது பாலாஜிக்கு சந்தேகம் வந்தது.டெலிபோன் கவரைப் பிரித்தால் அது வெடிக்கும் என்ற சந்தேகம் வந்தது. அவர் பட்டினப்பாக்கம்போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

உடனே போலீசார் டெலிபோனை எடுத்துச் சென்று பிரித்து சோதனையிட்டனர். டெலிபோனின்பின்புறத்தில் நான்கு பிளாஸ்டிக் பைகளில் பழுப்பு நிற பொருள் இருந்தது. அதை வெளியே எடுத்துப்பார்த்தபோது அது ஹெராயின் என தெரியவந்தது.

அதனுள் இருந்த ஹெராயின் 200 கிராம் எடை கொண்டது. சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு 50 லட்சம்ரூபாய் என்று தெரிவித்தனர்.

டெலிபோன் கருவியில் போதைப் பொருளை மற்ைததுக் கடத்தியது யார? பாலாஜிக்கும் அவருக்கும்என்ன தொடர்பு என்பது பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+