தமிழகத்தில் இன்று
சிறையில் கைதி சாவு: போலீஸ்நிலையம் சூறை
விஜயவாடா:
ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடாவில் போலீஸ் காவலில் இருந்த ஒருவர் மரணமடைந்ததால்ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த போலீஸ் நிலையத்தைச் சூறையாடினர்.
விஜயவாடா மாநிலத்தில் 25 வயதுடைய ஒருவர் போலீஸ் காவலில் இறந்ததால் கோபமடைந்த 1000 பேர் கொண்ட கும்பல் ஒன்று போலீஸ் ஸ்டேஷன் தாக்கிசேதப்படுத்தியது. இந்தத் தாக்குதலில் துணை போலீஸ் கமிஷனர் சி.வி. சேஷகிரிராவ் மற்றும் இரண்டுகாவல் துறையினர் காயமடைந்தனர்.
ஸ்ரீனிவாசராவ் என்பவருக்கும் மதுக்கடைக்காரர் ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட சண்டையினால்ஸ்ரீனிவாசராவ் கைது செய்யப்பட்டார். அவரை போலீசார் சிறையில கொடுமைப்படுத்தி கொன்றுவிட்டதாக தொழிலாளர்கள் கூறினர்
ஸ்ரீனிவாசராவ் இறந்ததால் காயமடைந்தவர்கள் ஒரு போலீஸ்காரரின் மொபெட்டைக்கொளுத்தியும், போலீஸ் ஜீப்பை கல்லால் அடித்து சேதப்படுத்தியும், போலீஸ் ஸ்டேஷனில் உள்ளநாற்காலிளையும் எடுத்துச் சென்றுவிட்டனர்.
ஒரு இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் தற்காலிக பணி நீக்கம்செய்யப்பட்டதாகவும் நீதிமன்ற விசாரணை மேற்கொள்ளவிருப்பதாகவும் போலீஸ் கமிஷனர் கூறினார்.
முன்னதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ தலைமையில் தொண்டர்கள் போலீஸ் நிலையம் முன் தர்ணா செய்தனர்.இறந்து போன தொழிலாளியின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை வேண்டும். இறந்துபோனவர் குடும்பத்துக்கு உதவித் தொகை வழங்க வேண்டும் என்று அவர்கள் கூறினர்.
நிலைமையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பொருட்டு, நான்கு பிளாட்டூன் ஆயுதப் படை போலீசாரும்,ஆந்திர மாநில சிறப்பு போலீசாரும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications