தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

ஆனந்த் - கிராம்னிக் சாம்பியன்

டார்ட்மண்ட் (ஜெர்மனி):

ஸ்பார்கஸன் செஸ் போட்டியில் இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக் இருவரும் முதலிடம் பெற்றனர்.

8-வது சுற்றின் முடிவில் 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த ஆனந்த், கடைசிச் சுற்றில் ஜெர்மனியின் ராபர்ட் ஹப்னரை எதிர்த்து விளையாடினார்.வெள்ளைக் காய்களுடன் விளையாடிய ஹப்னர், 39-வது நகர்த்தலில் தனது தோல்வியை ஒப்புக் கொண்டு வெளியேறினார். இதையடுத்து ஆனந்த் 6 புள்ளிகள்பெற்றார்.

மற்றொரு ஆட்டத்தில் 5.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்த முதல் நிலை ஆட்டக்காரர் கிராம்னிக், ஃபிடே உலக சாம்பியன் அலெக்சாண்டர்காலிஃப்மெனை எதிர்த்து விளையாடினார். 15-வது நகர்த்தலுக்குப் பிறகு இருவரும் டிரா செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர். இதையடுத்து இருவருக்கும் தலா.5 புள்ளிகள் கிடைத்தன.

தலா 6 புள்ளிகள் எடுத்த ஆனந்த், கிராம்னிக் இருவரும் ஸ்பார்கஸன் செஸ் பட்டத்தைக் கூட்டாக வென்றனர். கடந்த முறை நடந்த போட்டியிலும் இருவரும்கூட்டாகப் பட்டம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

5 புள்ளிகள் எடுத்திருந்த பீட்டர் லேகோ கடைசி சுற்றில் கம்ப்யூட்டருடன் நடந்த ஆட்டத்தில் தோல்வியடைந்ததால் 3-ம் இடம் பெற்றார். ஆடம்ஸ்,அகோபியன் ஆகியோரும் தலா 5 புள்ளிகள் எடுத்து 3-ம் இடம் பெற்றனர்.

ஸ்பார்கஸன் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் உலக தரப் பட்டியலில் ஆனந்த்துக்கு அதிக புள்ளிகள் கிடைத்துள்ளன. இது தவிர, உலக தரப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள கிராம்னிக்கை முந்துவதற்கு அவருக்கு 8 புள்ளிகளே தேவை.

அடுத்து செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற உள்ள செஸ் உலகக் கோப்பைப் போட்டியில் ஆனந்த் பங்கு கொள்கிறார். அக்டோபர் மாதம் லண்டனில்நடைபெறும் ஆட்டத்தில் கிராம்னிக்கும், உலக சாம்பியன் காஸ்பரோவும் மோதுகின்றனர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+