For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

போலீஸ்காரர்கள் மான் கறி சாப்பிட்டதாக கூறுகிறார் தாமரைக்கனி

சென்னை:

சாதி மோதலை அடக்கும் பணிக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் வந்த போலீஸ்காரர்கள், புள்ளி மான் ஒன்றை சுட்டுக் கொன்று சாப்பிட்டதாக அதிமுகஎம்.எல்.ஏ. தாமரைக்கனி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர் மேனகா காந்தி ஆகியோருக்கு அவர் பேக்ஸ் செய்தி அனுப்பியுள்ளார். இந்த பேக்ஸ் செய்தி குறித்துசென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வி.புதுப்பட்டியில் சமீபத்தில் சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையிலிருந்து20 சிறப்புப் போலீஸ் படை போலீஸ்காரர்கள் பாதுகாப்புப் பணியிக்கு வந்தனர்.

அந்தப் பணியின்போது, குற்றவாளிகளைப் பிடிப்பதற்காக அனைவரும் கான்சாபுரம் மலைப் பகுதிக்குச் சென்றனர். தேடுதல் வேட்டையின்போது, ஒரு புள்ளிமானை சுட்டுக் கொன்றுள்ளனர். பின்னர் தாங்கள் தங்கியிருந்த சாமியார் கோவில் சர்ச் பகுதிக்கு அதைக் கொண்டு வந்து சமைத்துச் சாப்பிட்டுள்ளனர்.

எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தவுடன், வனத்துறை அதிகாரிகளுக்குத தெரிவித்தேன். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் நடத்தி சோதனையில்மண்ணில் புதைக்கப்பட்டிருந்த மானின் தோல் மற்றும் எலும்புகள் கிடைத்தன.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட போலீஸ்காரர்களைக் கைது செய்யுமாறு வனத்துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர், போலீஸ் டி.ஐ.ஜி ஆகியோருக்குப்புகார்கள் கொடுத்தேன். ஆனால் இதை மூடி மறைக்க அவர்கள் முயல்கின்றனர். தமிழக காவல்துறைக்கு முதல்வர் கருணாநிதி பொறுப்பு வகிப்பதால்,அவருக்குக் கெட்ட பெயர் ஏற்படுவதைத் தவிர்க்க நினைக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியில் உள்ள நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும். தவறு செய்தபோலீஸ்காரர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று தாமரைக்கனி கூறியுள்ளார்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X