தமிழகத்தில் இன்று
வைரம் பட்டை தீட்டுதல்: இந்தியா, ரஷ்யா ஒப்பந்தம்
மாஸ்கோ:
வைரம் பட்டை தீட்டும் தொழிலில் இணைந்து செயல்படுவது என இந்தியாவும், ரஷ்யாவும் முடிவு செய்துள்ளன. இது தொடர்பான இறுதி ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாகவுள்ளது.
இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான பொருளாதாரக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் இந் நடவடிக்கைமேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு வைரங்களை ரஷ்யா வழங்கும். அந்த வைரங்கள் இந்தியாவில் பட்டை தீட்டப்படும்.
பட்டை தீட்டிய வைரங்களை இந்தியாவும், ரஷ்யாவும் கூட்டு சேர்ந்து மூன்றாம் உலக நாடுகளுக்கு விற்பனை செய்யும். இது தொடர்பான ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வரும் அக்டோபர் மாதம் இந்தியாவுக்கு வருகிறார். அப்போது இந்த புதிய ஒப்பந்தம் உள்பட மேலும் பல ஒப்பந்தங்களும்கையெழுத்தாகும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன. ஒப்பந்தங்களில் இந்தியப் பிரதமர் வாஜ்பாயும், ரஷ்ய அதிபர்புடினும் கையெழுத்திடுவார்கள்.
உலகிலேயே வைரம் அதிக உற்பத்தி செய்யும் நாடு ரஷ்யா என்பதும், வைரங்களைப் பட்டை தீட்டுவதில் உலகிலேயே முதலிடத்தில் இருப்பது இந்தியாஎன்பதும் குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் உற்பத்தி செய்யப்படும் வைரங்கள் தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பப்பட்டு பட்டை தீட்டப்படுகின்றன.
யு.என்.ஐ.