தமிழகத்தில் இன்று
திருவனந்தபுரத்தில் சர்வதேச திரைப்பட விழா
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத் தலைநகர் திருவனந்தபுரத்தில், 5-வது சர்வதேச திரைப்பட விழா ஜூலை 28-ம் தேதிதுவங்குகிறது.
சலச்சித்திரா திரைப்பட கழகம் சார்பில் இந்த திரைப்பட விழா நடத்தப்படுகிறது. 14 நாடுகளைச் சேர்ந்த50 திரைப்படங்கள் இந்த விழாவில் கலந்துகொள்கின்றன. பிரபல திரைப்பட இயக்குநர் ஷியாம்பெனகல் விழாவைத் துவக்கி வைக்கிறார்.
ஆசிய சினிமா குறித்த தனிப் பிரிவும் இந்தத் திரைப்பட விழாவில் இடம் பெறுகிறது. இந்தப் பிரிவில்இந்தியா உள்பட ஐந்து ஆசிய நாடுகள் கலந்துகொள்கின்றன.
இவை தவிர, ஈரான், ஹங்கேரி, பிரான்ஸ், குரோஷியா, இத்தாலி, பிரிட்டன், அமெரிக்கா ஆகியநாடுகளின் திரைப்படங்களும் கலந்துகொள்கின்றன. டாகுமெண்டரிப் படங்களும் இந்த விழாவில்கலந்துகொள்கின்றன.
இந்தியப் பிரிவில், பிரபல மலையாளப் படங்களான கருணம், வானப்பிரஸ்தம், ஜலமரணம், சர்ப்ராஷ்,குச்குச்ஹோத்தா ஹை, எர்த், பயர் ஆகிய படங்கள் கலந்துகொள்கின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.