தமிழகத்தில் இன்று
முன்னாள் அமைச்சர் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு
சென்னை:
சால்வை விற்ற கணக்கை எல்லாம் வருமானத்தில் சேர்த்த முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்சத்தியமூர்த்தி மீதான ஊழல் வழக்கில் அடுத்த மாதம் தீர்ப்பு கூறப்படுகிறது.
சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ள நிலையில் வக்கீல்கள் இறுதி வாதம் ஆகஸ்ட் 1-ம் தேதிநடைபெறும் என்று தனி நீதிபதி ராதாகிருஷ்ணன் திங்கள் கிழமை உத்தரவிட்டார்.
அ.தி.மு.க. ஆட்சியில் வணிகவரித் துறை அமைச்சராக இருந்தவர் சத்தியமூர்த்தி. இவர் மீதுவருமானத்தை மீறி 83 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் சேர்த்ததாக வழக்குத்தொடரப்பட்டுள்ளது. இரண்டாவது தனி நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வழக்கில் தான் தன்னுடைய வருமானத்திற்காக ஆதாரமாக சால்வை வியாபாரம் பற்றிதெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார் சத்திய மூர்த்தி.
அமைச்சராக இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட சால்வைகள் விற்பனை மூலம் லட்சக்கணக்கில் சம்பாதித்தாக சத்தியமூர்த்தி உதவியாளர் ஒருவர் மூலம் கோர்ட்டில் சாட்சியம்அளிக்கப்பட்டது.
கடந்த 1997ம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 98ம் ஆண்டுடிசம்பர் 11ம் தேதி முதல் சாட்சிகள் விசாரணை துவங்கியது. அரசு தரப்பில் 113 சாட்சிகளும், எதிர்தரப்பில் 31 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டனர்.
திங்கள் கிழமையுடன் இரு தரப்பு சாட்சிகளின் விசாரணையும் முடிவுற்றது. வக்கீல்கள் இறுதி வாதம்ஆகஸ்ட் 1ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். இறுதி வாதம்முடிவடைந்ததும் வழக்கில் தீர்ப்பு கூறப்படும்.












Click it and Unblock the Notifications