தமிழகத்தில் இன்று
பிலிப்பைன்ஸ் மசூதியில் 21 பேர் சுட்டுக் கொலை
மணிலா:
பிலிப்பைன்ஸ் நாட்டில் மசூதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்த 21 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
மின்டநாவோ தீவில் லானாவோ டெல் சுர் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை இச் சம்பவம் நடந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது.
லானாவோ டெல் சுர் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் உள்ள மசூதியில் முஸ்லிம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது துப்பாக்கி ஏந்திய சிலர்மசூதிக்குள் புகுந்து அங்கிருந்த 22 பேரையும் சிறைப்பிடித்தனர்.
பின்னர் துப்பாக்கியால் அவர்கள் அனைவரையும் சுட்டுவிட்டு ஓடிவிட்டனர். இதில், உள்ளூர் கவுன்சிலர் ஒருவர் தவிர மற்ற 21 பேரும் அதே இடத்தில்இறந்தனர். காயமடைந்த கவுன்சிலர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இத் தாக்குதலுக்கான காரணம் தெரியவில்லை. இத் தாக்குதலுக்கும் பிலிப்பைன்ஸ் நாட்டில் புதிய இஸ்லாமிய மாகாணம் உருவாக்கவேண்டும் என்றுகேட்டுப் போராடி வரும் மோரோ இஸ்லாமிய விடுதலை முன்னணியைச் சேர்ந்த தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.
கொலையாளிகளைத் தேடிக் கண்டுபிடிக்கும் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் ஜானி மேஜர் மகானாஸ் தெரிவித்தார்.