தமிழகத்தில் இன்று
வட, தென் கொரியாக்கள் இணைய 30 வருடம் ஆகும்
லண்டன்:
வடகொரியாவும், தென்கொரியாவும் இணைவதற்கு இன்னும் 20 அல்லது 30 வருடங்கள் ஆகலாம் என்று தென்கொரிய அதிபர் கிம்-டே-ஜங்தெரிவித்தார்.
கடந்த மாதம் வட கொரியாவில் கிம் டே சுற்றுப்பயணம் மேற்கொண்டார். கொரியா இரண்டாக பிரிந்த பிறகு, வட கொரியாவுக்குச் சென்ற முதல்தென் கொரிய அதிபர் கிம்தான். கொரியாக்கள் மீண்டும் சேருவது குறித்து அப்போது பேசப்பட்டது. இதுகுறித்து பத்திரிகை ஒன்றுக்கு கிம் அளித்தபேட்டியில்,
இரு நாடுகளையும் இணைப்பது தொடர்பாக, இரு நாட்டு அதிபர்களும் சந்தித்துப் பேச நான்கு, ஐந்து முறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு தோல்வியைத்தழுவியது. இருப்பினும், வட கொரிய அதிபரின் முயற்சியால் கடந்த மாதம் இருவரும் சந்தித்துப் பேசும் வாய்ப்பு கைகூடியது.
ஆனால் இரண்டு கொரியாக்களும் இணைவதில் காலதாமதம் ஏற்படும். இதற்கு 20 முதல் 30 ஆண்டுகள் வரை ஆகலாம். எப்போது இரண்டுநாடுகளும் இணைகிறது என்பது இப்போதைய பிரச்சனையல்ல.
நாட்டை எதிர்நோக்கியிருக்கும் பொருளாதாரப் பிரச்சனைகள், போரைச் சமாளிக்கும் விதம் போன்றவற்றில் இரு நாடுகளும் ஒன்றிணைந்துசெயல்படும் என்றார்.












Click it and Unblock the Notifications