தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
"பணக்குவியல் மூலம் ரூ. 28 லட்சம் சுருட்டியவர் கைது
கோவை:
கோவையில் நிதி நிறுவனம் நடத்தி ரூ. 28 லட்சம் மோசடி செய்ததாக 3 பேரைப்போலீசார் கைது செய்தனர்.
கோவை ராமநாதபுரம் அருகே உள்ள சுங்கம் பகுதியில் பணக்குவியல் என்ற நிதிநிறுவனம் நடத்தி வந்தவர் செல்வம் (31). இவரது தம்பி தேவராஜ் (25). இவர்களதுதந்தை சிவம் (59). இவர்கள் பலரிடம் ரூ. 28 லட்சம் வரை டெபாசிட் பணம் வசூல்செய்துள்ளனர்.
முதிர்வடைந்த டெபாசிட்தாரர்களுக்கு, அவர்களுக்குரிய தொகையைத் திருப்பித்தராததால் இவர்கள் மீது டெபாசிட்தாரர்கள் புகார் செய்தனர்.
இந்த புகாரையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications