தமிழகத்தில் இன்று
கோவை ரயில்நிலையத்தை பயமுறுத்திய கல்லூரி ஆசிரியர்
கோவை:
கோவை வந்த ரயிலில் வெடிகுண்டு வைத்திருக்கும் மர்ம ஆசாமிகள் இருப்பதாகபயணி ஒருவர் புகார் கூறியதையடுத்து, ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.இதனால் ரயில் 40 நிமிடம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது.
கொச்சியிலிருந்து கோராக்பூர் செல்லும் கோராக்பூர் எக்ஸ்பிரஸ் ஞாயிற்றுக்கிழமைகோவை வந்தது. இதில் பயணம் செய்த குஞ்சுமோன் என்பவர் ரயிலில் பயணம் செய்தஇரண்டு இளைஞர்கள் பாக்கெட்டில் குண்டு வைத்திருப்பதாக கோவை ரயில்நிலையத்தில் பணியில் இருந்த அதிகாரிகளிடம் புகார் கூறினார்.
இதனால் பரபரப்படைந்த அதிகாரிகள் ரயிலை நிறுத்தி விட்டு, போலீசாருக்குத் தகவல்கொடுத்தனர். இதையடுத்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, ரயில் பெட்டிகளில்சோதனையிடப்பட்டது. அதிரடிப்படையினரும் முற்றுகையிட்டு சோதனை செய்தனர்.ஆனால், குண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இதனால் கோராக்பூர் எக்ஸ்பிரஸ் 40 நமிடம் தாமதாகப் புறப்பட்டுச் சென்றது.குஞ்சுமோன் நேபாளில் உள்ள ஒரு மருத்துவக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இவர் மன நிலை பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கருதிய போலீஸார்,பரிசோதனைக்காக, மனோதத்துவ மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர்.












Click it and Unblock the Notifications