கீதையின் பாதையில்...
வக்கீல்களை உதறினார் மலேசிய முன்னாள் துணை பிரதமர்
கோலாலம்பூர்:
தன் மீதான கற்பழிப்பு வழக்கில் தனக்காக தானே நீதிமன்றத்தில் ஆஜராகி வாதாட உள்ளார் மலேசிய முன்னாள் துணை பிரதமர் அன்வர் இப்ராஹிம்.
கற்பழிப்புக் குற்றத்துக்காக தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அன்வர் இப்ராஹிம், இவ் வழக்கில் தனக்காக ஆஜாராகிவந்த வழக்கறிஞர்கள் அனைவரையும் நீக்கி விட்டார்.
இவ் வழக்கில் தானே ஆஜராக விரும்புவதாக நீதிபதி அரிஃபின் ஜாகாவிடம் அவர் கூறியுள்ளார்.
இவ் வழக்கு கடைசியா விசாரணைக்கு வந்தபோது, இவ் வழக்கில் வழக்கறிஞர்களை வைத்து தொடர்ந்து வாதாட போகிறீர்களா அல்லது நீங்களேஆஜராக விரும்புகிறீர்களா என்று நீதிபதி ஜாகா கேட்டார். அப்போது தனக்காக தானே ஆஜராக விரும்புவதாக அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
எனக்காக வாதாட வழக்கறிஞர்களை நீக்கியதன் மூலம் அவர்களுக்குத் திறமையில்லை என்று அர்த்தமாகாது. இந்த வழக்கில் அவர்கள்எனக்காக நன்றாகப் பணியாற்றினர். அவர்களைத் தவிர வேறு யாரும் எனக்கு இவ்வளவு உதவிகளைச் செய்திருக்க முடியாது.
இவ் வழக்கில் எனது சொந்த வாழ்க்கை தொடர்பான கேள்விகளை எதிர் தரப்பு வழக்கறிஞர் கேட்டுள்ளார். அதற்கு நானே நேரடியாகப் பதிலளிக்கவிரும்புகிறேன். அதற்காக, இவ் வழக்கில் எனக்காக நானே நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளேன் என்றார் அன்வர் இப்ராஹிம்.