For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் செய்தி இன்று

By Staff
Google Oneindia Tamil News
No image

மூப்பனாருக்கு ஜெ. அனுப்பிய அவசரக் கடிதம்

சென்னை:

ஜெயலலிதாவின் அவசரக் கடிதத்துடன் த.மா.கா தலைவர் மூப்பனாரை சந்தித்துப்பேசினார் தினகரன்.

அ.தி.மு க பொதுச்செயலாளர் ஜெயலலிதா இப்போது ஹைதராபாத்தில் இருக்கிறார்.மூப்பனாருக்கு அவர் எழுதிய அவசரக் கடிதத்துடன் அ.திமு.க எம்.பி. தினகரன்,சென்னையில் மூப்பனாரை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இருவரும் ஒரு மணி நேரம் பேசினர். இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வமாககருத்து தெரிவிக்க மூப்பனார் மறுத்து விட்டார்.

அ.தி.மு.க இம்மாதம் 31ம் தேதி அறிவித்துள்ள போராட்டத்திற்கு ஆதரவுகேட்டும்,சென்னை நகரம் உள்பட பல ஊர்களில் நடைபெறும் உள்ளாட்சி இடைத்தேர்தலில்அ.தி.மு.கவை ஆதரிக்கும்படியும் ஜெயலலிதா கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளதாகதெரிகிறது.

அதேபோல் முன்னாள் கவர்னர் பா.ராமச்சந்திரனுக்கு தியாகிகள் தினத்தை முன்னிட்டுபாராட்டு விழாவும் தேனீர் விருந்தும் சென்னையில் மூப்பனார் திங்கள் கிழமைஅளித்தார். இந்நகழ்ச்சிக்கு ஜெயலலிதாவை மூப்பனார் அழைத்திருந்தார். அதற்கு வரமுடியாத காரணத்தையும் கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது.

English summary
dinakaran carries jayalalitha letter to moopanar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X