தமிழகத்தில் இன்று
"வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சியமைப்போம்
திருச்சி:
மக்கள் வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று முன்னாள் மத்திய அமைச்சரும், தமிழ் மாநில காங்கிரஸ் அரசியல் ஆலோசனைக் குழுஉறப்பினுமான எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் கூறியுள்ளார்.
திருச்சி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், மத்தியில் பெடரல் அசும், மாநில அரசுக்கு கூடுதல் அதிகாரமும்தேவை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தொடர்ந்து கூறி வருகிறார்.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பதெல்லாம் சரிவராத விஷயங்கள். அப்படி இருந்தால், இந்தியா, இந்தியாவாக இருக்காது.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைக் கொண்டு வர தமிழ் மாநில காங்கிரஸும், காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து பாடுபடும். அடுத்த ஆண்டு வரவுள்ள சட்டசபைத்தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு மக்கள் வாய்ப்பு தந்தால் காமராஜர் ஆட்சி அமைப்போம்.
தேசிய ஜனநாயகக்கூட்டணயில் உள்ள தலைவர்களிடையே ஒற்றுமை இல்லை. தினசரி ஏதாவது ஒரு பிரச்சினைக்காக சண்டை போடுகிறார்கள்.அவர்களுக்குள் இடைவெளி அதிகரித்து வருகிறது.
ஜம்மு காஷ்மீருக்கு சுயாட்சி தர வேண்டும் என்று முதல்வர் பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி கோருவது தேவையில்லாதது என்றார் அவர்.
யு.என்.ஐ.