வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சாதி வாரியாக இடஒதுக்கீடு கேட்கிறார் பூலான் தேவி
சென்னை:
மகளிர் இட ஒதுக்கீடுச் சட்ட மசோதாவை தற்போதைய வடிவில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விடமாட்டோம். என்ன செய்தாவது அதைதடுத்துக் காட்டுவோம் என்று "மாஜி கொள்ளைக்காரியும், சமாஜ்வாடி கட்சி எம்.பி.யுமான பூலான்தேவி தெரிவித்தார்.
தமிழகம் வந்துள்ள அவர் திருநெல்வேலியில் நடைபெற்ற ஒரு மாதப் பத்திரிகையின் வெள்ளி விழாவில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டிஅளித்தார்.
பேட்டி வருமாறு:
நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டுள்ளது.
இந்த மசோதாவில் பிற்படுத்தப்பட்டவர்கள், நலிவுற்ற சதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட வேண்டும் என்று சமாஜ்வாடி கட்சிவலியுறுத்தி வருகிறது.
சாதி வாரியாக பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்பதை சமாஜ்வாடிக் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது.
பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பெண்களுக்கெனவும், கிராமப் பகுதியில் வாழும் பெண்களுக்கெனவும் தனியான ஒதுக்கீடுகள் அவசியம்என்பதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.
தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் மசோதாவால், படித்த, பணக்காரப் பெண்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கும். மற்ற பெண்களுக்குஎந்த பலனும் கிடைக்காது.
எனவே தற்போதைய வடிவில் இந்த மசோதாவை நிறைவேற்ற விடமாட்டோம். எங்களின் இந்த முயற்சிக்கு வேறு சில கட்சிகளும் ஆதரவுதெரிவித்துள்ளன.
அப்படியே எங்கள் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டாலும், ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் அதற்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று எங்கள் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது என்றார் பூலான்தேவி.