தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
13 தமிழ் அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமேஸ்வரம்:
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருவதை அடுத்து இலங்கையிலிருந்து தமிழகம்வரும் தமிழ் அகதிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஏற்கெனவே ஆயிரக்கணக்கான அகதிகள் தமிழகம் வந்துள்ளனர். இந் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 13 பேர் சிறிய படகு மூலம் தனுஷ்கோடிஅருகே உள்ள அரிசல்னை கடற்கரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தனர்.
பின்னர் அங்கிருந்து, ராமேஸ்வரத்துக்கு வேனில் வந்த அவர்களை குந்தராயர் சோதனைச் சாவடியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் விசாரித்தனர். பிறகுஅனைவரும் தனுஷ்கோடி போலீஸ் நிலையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களிடம் இந்திய கடற்படை அதிகாரிகள் மற்றும் தமிழகப் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications