தமிழகத்தில் இன்று
கல் கரி மீதான சுங்க வரி குறைக்கப்படும் - மத்திய அமைச்சர்
டெல்லி:
இரும்பு உருக்காலைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் கல் கரி மீதான சுங்க வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்தியஎஃக்குத் துறை அமைச்சர் ராஜா கிஷோர் திரிபாதி தெரிவித்தார்.
டெல்லியில் நடைபெற்ற தேனிரும்பு உற்பத்தியாளர்கள் சங்க ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
இரும்பு உருக்காலைகளில் அதிக அளவு பயன்படுத்தப்படும் கல் கரி மீதான சுங்க வரியைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.சமீபகாலத்தில் கல் கரி மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்த வரி உயர்வு எஃக்குத் துறை வளர்ச்சிக்கு ஊக்குவிப்பதாக இல்லை. ஆகவே, சுங்க வரியைக் குறைப்பது குறித்து மத்திய நிதி மற்றும் நிலக்கரித் துறைஅமைச்சகங்களுடன் பேச்சு நடத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் குறைந்த எண்ணிக்கையில்தான் கல் கரியைப் பயன்படுத்தும் தேனிரும்பு வார்ப்படத் தொழிற்சாலைகள் உள்ளன. ஆகவே, கல் கரி மீதான சுங்கவரி உயர்வால் பெரிய பாதிப்பு இல்லை.
ஏனெனில் அந்த தொழிற்சாலைகள் இப்போது கூட வெளிநாடுகளில் இருந்து கல் கரியை இறக்குமதி செய்து லாபகரமாகத் தொழில் நடத்தி வருகின்றனஎன்பதும் உள்ளூரில் கிடைக்கும் கல் கரியின் விலையும் குறிப்பிடத்தக்க அளவுக்கு உயரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது என்றார் திரிபாதி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications