தமிழகத்தில் இன்று
தெற்காசியாவில் கருச்சிதைவுக்குப் பலியாகும் 33,000 பெண்கள்
பெங்களூர்:
இந்தியா, பாகிஸ்தான் உள்பட தெற்காசிய நாடுகளில் 60 லட்சம் பெண்கள் வருடந்தோறும் பாதுகாப்பற்ற முறையில் கருச்சிதைவு செய்துகொள்கின்றனர். இவர்களில் 33,000 பேர் உயிரிழக்கின்றனர் என்று தெரிய வந்துள்ளது.
சர்வதேச பெற்றோர் கழகம் இதுகுறித்து ஆய்வு செய்து வெளியிட்டுள்ள அறிக்கை விபரமாவது:
இந்தியாவில் கருச்சிதைவு செய்துகொள்வது சட்டப்படி குற்றமல்ல. இருப்பினும் கருச்சிதைவு செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.
வளர்ந்து வரும் நாடுகளில் 99 சதவீத பெண்கள் பாதுகாப்பற்ற முறையில் கருச்சிதைவு செய்து கொள்வதால் இறக்கின்றனர். வருடந்தோறும்பாதுகாப்பின்றி கருச்சிதைவு செய்து கொள்ளும் 17 கோடியே 62 லட்சம் பெண்களில் 69,000 பேர் இறக்கின்றனர். ஆசியாவில் மட்டும் 92.4 லட்சம்பாதுகாப்பற்ற கருச்சிதைவில் 40,000 பெண்கள் இறக்கின்றனர்.
உலகிலேயே கருச்சிதைவினால் ஏற்படும் இறப்புக்கள் தெற்காசியாவில் மட்டுமே அதிகம். இந்தியாவில் கருச்சிதைவு செய்யும் 7 பெண்களில் 6 பேர்இறக்கின்றனர். வளர்ந்த நாடுகளில் பாதுகாப்பற்ற முறையில் கருச்சிதைவு செய்து கொள்ளும் 23.4 லட்சம் பெண்களில் 600 பேர் வருடந்தோறும்இறக்கின்றனர்.
மருத்துவமனைக்குச் செல்லாமல் தவறான முறையில் கருச்சிதைவுகள் செய்துகொள்வதால் ஏற்படும் ஆபத்துக்கள், உயிரிழப்புக்கள்,குடும்பக்கட்டுப்பாடு ஆகியவை குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சர்வதேச பெற்றோர் கழகம் கூறியுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications